5020.

தென்நகுகுடம்,உள் பாடல்
     சித்தியர்இசைப்பத் தீம்சொல்
பன்னக மகளிர்வள்வார்த்
     தண்ணுமைப்பாணி பேண
பொன்னகர்த்தரளப் பந்தர்
     கற்பகப்பொதும்பர், பொன் - தோள்
இன்நகை அரம்பைமாரை
     ஆடல்கண்டுஇருக்கின் றாரும்.

     கற்பகப்பொதும்பர் - கற்பகச் சோலையில்;பொன் நகர் - அமராவதிநகரிலிருந்து கொணர்ந்த; தரளப் பந்தர் - முத்துப் பந்தலில்;
சித்தியர் -சித்தியர் குல மகளிர்; தென் நகு குடம் - அழகு மிக்க
குடமுழாவின் தாளஒத்துக் கேற்று; உள் பாடல் - உள்பட்ட பாடலை;
இசைப்ப - பாட; தீம்சொல் - இனிய சொற்கள் பேசும்; பன்னக மகளிர் -
நாகலோகத்து மகளிர்;வள்வார் - வலிய வாரால் கட்டப் பெற்ற; தண்ணுமை
பாணி -
மத்தளத்தின்தாளங்கள்; பேண - முழக்க; பொன் தோள் -
அழகிய தோள்களையும்; இன்நகை - இனிய பற்களையும் உடைய;
அரம்பைமாரை - விண்ணுலக மகளிர்;ஆடல் கண்டு - ஆடுதலைப்
பார்த்து; இருக்கின்றாரும் -இருப்பவர்களையும்.

     'தென்ன' என்றுஅமிர்தப் பாடல்' என்பதனைப் பாடம் கொண்டு
அதனுடன்கூடிய இனிய பாடல் என்க. 'தென்ன' என்பது ஆளத்தி தென்ன
என்னும் இசை வளர்த்து என்று சிலம்பு மேற்கோள் பகரும். (வேனிற் - 35)
வள்வார் - வலிமை மிக்கவார். 'வள்வார் முரசமொடு' என்றும் வருகின்ற (புற
- வெண். 3-2) கொளுவுரை காண்க. பாணி - தாளம். கொட்டும் அசையும்
தூக்கும் அளவும் - ஒட்டப் புணர்ப்பது பாணியாகும். (பஞ்ச மரபு 190 பக்)
                                                        (186)