தயிர்நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற,அறிவு தள்ளிப், பயிர்உறத்தெய்வம் என்மேல் படிந்ததுபார்மின் என்னா, உயிர்உயிர்த்துஇரண்டு கையும் உச்சிமேல்உயர நீட்டி, மயிர்சிலிர்த்து, உடலம் கூசி வாய்விரித்து ஒடுங்கு வாரும்.
தயிர்நிறத்து உறுகள் - தயி்ரின் நிறத்தைப் பெற்ற மிக்க காழ்ப்புடையகள்; உள்ளம் தள்ளுற - உள்ளத்தைத் தளரச்செய்ய; தம் - தம்முடைய;அறிவு தள்ளி - அறிவானது தடுமாற்றம் அடைந்து; பயிர் உற -தெய்வங்களை அழைத்தல் மிக (அதன்பின்); என்மேல் - என்னிடத்தில்;தெய்வம் படிந்தது - தெய்வம் சார்ந்துள்ளது; பார்மின் - காணுங்கள்;என்னா - என்று கூறி; உயிர் உயிர்த்து - பெருமூச்சுவி்ட்டு; உச்சிமேல் -தலையின்மேல்; இரண்டு கையும் - இரண்டு கைகளையும்; உயர நீட்டி -உயரும்படி நீட்டி; மயிர்சிலிர்த்து - மயிரானது சிலிர்க்கப் பெற்று; உடலம்கூசி - மேனி கூச்சம் அடைந்து; வாய் விரித்து - வாயைத் தி்றந்து;ஒடுங்குவாரும் - ஓய்ந்து போகின்றவர்களும். பிரிவாற்றாமையின் அதீதநிலை. (190)