5038. | நிலம்துடித்தன; நெடுவரை துடித்தன; நிருதர்தம்குலமாதர் பொலம் துடிக்குஅமை மருங்குல்போல் கண்களும் புருவமும்,பொன் - தோளும் வலம் துடித்தன;மாதிரம் துடித்தன; தடித்துஇன்றி, நெடுவானம் கலந்து இடித்தன;வெடித்தன பூரண மங்கலகலசங்கள். |
(அனுமன் அம்மாளிகையில் நுழைந்தபோது) நிலம் - இலங்கையில் பலஇடங்கள்; துடித்தன - அதிர்ந்தன; நெடுவரை - பெரிய மலைகள்; துடித்தன - அதிர்ந்தன; நிருதர்தம் குலமாதர் - அரக்கர்குலப் பெண்களின்; பொலந்துடிக்கு - அழகிய துடிக்கு; அமை - உவமையாகத்தக்க; மருங்குல்போல் - இடையைப்போல; கண்களும் - கண்களும்; புருவமும் - புருவங்களும்; பொன் தோளும் - அழகிய தோள்களும்; வலம் துடித்தன - வலப்பக்கத்தில் துடித்தன; மாதிரம் - திசைகள்; துடித்தன - அதிர்ந்தன; தடித்து இன்றி - மின்னல் இல்லாமலேயே; நெடுவானம் - நீண்ட மேகஆகாயம்; கலந்து - (ஒலி எல்லா இடத்திலும்) கலப்ப; இடித்தன - அதிர்ந்தன; பூரண மங்கல கலசங்கள் - நீர் நிரம்பிய மங்கல கலசங்கள்; வெடித்தன - சிதறின. அமை -உவமையாகத்தக்க. கலந்து என்றும் செய்து என்றும் செய என் எச்சமாக மாற்றுக. இடையைப்போல்கண் முதலானவை துடித்தன. இடையானது மெல்லியது ஆகையால் எப்போதும் துடிக்கும். அதுபோல் மற்றைய அங்கங்கள் துடித்தன. மகளிர்க்கு வலப்புறம் துடித்தல் கேட்டுக்கு அறிகுறி (கம்ப. 5100). (204) |