இராவணன் நிலையும்அனுமன் நினைவும் 5040. | நூல்பெருங்கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன்; மறம் கூரும் வேல் பெருங்கடல்புடைபரந்து ஈண்டிய வெள்ளிடைவியன்கோயில் பால் பெருங்கடல்பல்மணிப் பல்தலைப் பாப்புடைப் படர்வேலை மால் பெருங்கடல்வதிந்ததே அனையது ஓர் வனப்பினன்துயில்வானை |
பெருங்கடல் நூல்- பெருங்கடல் போன்ற நூல் அறிவையும்; நுணங்கிய - நுட்பமான; கேள்வியன் - கேள்வி அறிவையும் உடைய அனுமன்; மறம்கூரும் - வீரம் நிரம்பிய; பெரும் - பெரிய; வேல் கடல் - வேலேந்திய வீரர்கள் திரள்; புடை - பக்கங்களில்; பரந்து ஈண்டிய - பரவி நெருங்கியுள்ள; வெள்ளிடை - வெளி முற்றங்களையுடைய; வியன்கோயில் - பெரிய அரண்மனையில்; பெரும் - பெரிய; பாற்கடல் - பாற்கடலின் கண்ணே; பல்மணி - பல மணிகளையும்; பல்தலை - பல தலைகளையும் உடைய; பாப்பு - ஆதிசேடனை; உடை - உடைய; படர்வேலை - விரிகின்ற அலைகளையுடைய கடலிலே; மால் - திருமாலாகிய; பெருங்கடல் - பெரிய கடல்; வதிந்தது அனையது - தங்கியிருப்பது போன்ற; வனப்பினன் - அழகையுடையவனாய்; துயில்வானை - உறங்குகின்றவனை (இராவணனை); நோக்கினன் - பார்த்தான். வேலை - அலை.புலர்கின்ற வேலைப் புணரி (திருவிருத்தம் 75) பெரியவாச்சான் பிள்ளை, திரைக்கிளர்ச்சியை உடைய கடல் என்று உரை வகுத்தார். வேலை - கரை என்றும் கொள்ளலாம். கடலின் கரையும் வேலை என்றாகும் (பிங்கலம் - 4111). வெள்ளிடை -அரண்மனையின் முற்றம். (206) |