அறுசீர் விருத்தம் 5045. | கொண்டபேர் ஊக்கம் மூள திசைதொறும் குறித்து மேல்நாள் மண்டிய செருவில்,மானத் தோள்களால் வாரி வாரி உண்டதுதெவிட்டிப் பேழ்வாய்க் கடைகள்தோறு ஒழுகிப் பாயும் அண்டர்தம்புகழின் தோன்றும் வெள்எயிற்று அமைதி யானை-* |
மேல்நாள் -முற்காலத்தில்; கொண்ட பேர் ஊக்கம் மூள - மேற்கொண்ட பெரிய கிளர்ச்சி பெருக; திசைதொறும் - திக்குகள் தோறும்; குறித்து - பகைவர்களை வெல்ல எண்ணி; மண்டிய செருவில் - நெருங்கிய போரில்; மானத்தோள்களால் - மானமுடைய கைகளால்; வாரி வாரி - எடுத்தெடுத்து; உண்டது - உட்கொண்டது; தெவிட்டி - தேக்கிட்டு; பேழ் - பெரிய; கடைவாய்கள் தோறும் - கடைவாய்கள் தோறும்; ஒழுகிப்பாயும் - ஒழுகி வழிகின்ற; அண்டர்தம் புகழின் - தேவர்களின் புகழைப்போல; தோன்றும் - காணப்படும்; வெள்எயிறு - வெண்மையான (கோரை) பற்களின்;அமைதியானை - தோற்றத்தை உடையவனை (இராவணனை). தோள் - கை.தோள் உற்று ஓர் தெய்வம் (சிந்தாமணி 10 நச்) தெவிட்டுதல் - உண்டது வெளிப்படல். எனக்குத் தெவிட்டி விடுகின்றேனோ என்றபடி (திருவாய் 6-5-5 நம்பிள்ளை) புகழ்வெண்ணிறமாய்ப் பேசப்படும். இவ்விருத்தம்மூன்றும் ஆறும் காய்ச்சீர்கள்; மற்றைய நான்கும் மாச்சீர்கள். இந்நூலில் இத்தகைய பாடல்கள் 110. (மணிமலர் 76) (211) |