5050.

தழுவாநின்ற கருங்கடல் மீது
     உதயகிரியில் சுடர்தயங்க
எழுவான் என்ன,மின் இமைக்கும்
     ஆரம்புரளும் இயல்பிற்றாய்,
முழு வானவர்ஆய்உலகம் ஒரு
     மூன்றும்காக்கும் முதல் தேவர்,
மழு, வாள்,நேமி, குலிசத்தின்
     வாய்மைதுடைத்த மார்பானை-

     தழுவாநின்ற -(தன்னைச்) சார்ந்துள்ள; கருங்கடல்மீது - கருமையான
கடலின் மேலே (உள்ள); உதயகிரியில் - உதயமலையின் கண்ணே;
சுடர்தயங்க -
ஒளி விளங்க; எழுவான் என்ன -  தோன்றும்
சூரியனைப்போல; மின் இமைக்கும் - ஒளியைப் பரப்பும்; ஆரம் புரளும் -
மணிமாலைகள் புரள்கின்ற; இயல்பிற்றாய் - தன்மை உடையதாய்; முழு
வானவராய் -
பூரணத்துவம் பெற்ற விண்ணவராய்; உலகம் ஒரு மூன்றும் -
ஒப்பற்ற மூன்று உலகத்தையும்; காக்கும் - பாதுகாக்கும்; முதல் தேவர் -
தலைமைத் தேவர்களின் (ஏவிய); மழுவாள் நேமிகுலிசத்தின் - மழுப்படை,
சக்கரம், வச்சிராயுதம் என்னும் ஆயுதங்களின்; வாய்மை - தப்பாத ஆற்றலை;
துடைத்த -
இல்லையாக்கின; மார்பானை - மார்பையுடையவனை
(இராவணனை).

     சூரியனைப்போன்ற ஆரங்கள். மழுவாள் - மழுப்படை. 'மழுவாள்
நெடியோன்' (மதுரைக் - 455) வாய்மை - தப்பாமை - வலம்படு வாய்வாள்
ஏந்தி (புறம் 91 -உரை).

     வாய்மை என்பதற்கு வலிமை என்றும் பொருள் கூறலாம். முடலைகொள்
வாய்மை ... துப்பு. (சூடா - நிக - பண்பு 28)                    (216)