கொச்சகக் கலி | 5053. | தோள்ஆற்றல் என்னாகும் ? மேல்நிற்கும் சொல் என்னாம் ? வாள் ஆற்றுகண்ணாளை வஞ்சித்தான் மணிமுடிஎன் தாள் ஆற்றலால்இடித்துத் தலைபத்தும்தகர்த்து இன்றென் ஆள் ஆற்றல்காட்டேனேல் அடியேனாய்முடியேனே ! |
(சீற்றங்கொண்டஅனுமன்) வாள் ஆற்று -வாளை ஒத்த; கண்ணாளை - கண்களை உடைய சீதாபிராட்டியை; வஞ்சித்தான் - வஞ்சித்துச் சிறை வைத்த இராவணனின்; மணிமுடி - மணிகள் பதித்த கீரிடத்தை; என் தாள் ஆற்றலால் - என்னுடைய கால் வலிமையால்; இடித்து - தாக்கி; பத்துத் தலையும் - பத்து தலைகளையும்; தகர்த்து - பொடிப் பொடியாக்கி; இன்று - இன்றைய தினத்தில்; என் - என்னுடைய; ஆள் ஆற்றல் - அடிமையின் வலிமையை; காட்டேனேல் - காட்டாமற் போனால்; தோள் ஆற்றல் - (என்னுடைய) தோளின் வலிமை; என்னாகும் - என்ன பயனுடையதாகும்; மேல் - இனிமேல்; நிற்கும் - நிலை பெற்றிருக்கும்; சொல் - புகழானது;என்னாம் - என்ன சிறப்பை அடையும் (அன்றி); அடியேனாய் - (யான்) தொண்டு புரிபவனாக; முடியேன் - கருதப்படமாட்டேன். ஆற்றுதல் -ஒத்தல் 'வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' என்னும் தமிழ் மறைக்கு (குறள் - 101) வரைந்த அழகரின் உரையைக் காண்க. தோள் ஆற்றல்,மேல் நிற்கும் சொல் என்பனவற்றை இராவணனுக்கு ஆக்கி, அவை என்முன் என்னாகும்என்று அனுமன் தன்வீரத்தை நினைத்துக் கூறியதாகவும் கொள்ளலாம். முடியேன் -கருதப்படமாட்டேன். முடிதல் - கருதுதல். அவன் முடிவு யாதோ என்னும் உலக வழக்கு இப்பொருளைக் காட்டும். நான்கு சீர்களும்காய்ச்சீர் பெற்றும், இத்தகு பாடல்கள் இந்நூலில் 120 காணப்படுகின்றன (மணிமலர் 76) (219) |