சீதையைக் காணாதஅனுமன் எண்ணம் | என்றுஎண்ணி, "ஈண்டு இனியோர் பயன்இல்லை என நினையா குன்றன்னதோளவன்தன் கோமனைபிற்படப் பெயர்ந்தான்; நின்று எண்ணிஉன்னுவான் அந்தோ !இந் நெடு நகரில் பொன் துன்னும்மணிப் பூணாள் இலள்என்ன, பொருமுவான். |
என்று எண்ணி -என்றுகருதி; இனி - இனிமேல்; ஈண்டு - இங்கே (இருப்பதால்); ஓர் பயன் இல்லை - ஒரு பிரயோசனம் இல்லை; என - என்று; நினையா - எண்ணி; குன்று அன்ன - மலை போன்ற; தோளவன்தன் - தோளையுடைய இராவணனின்; கோமனை - அரண்மனை; பிற்பட - பின்னே நிற்க; பெயர்ந்தான் - வெளியே சென்ற அனுமன்; அந்தோ - ஐயோ; இ நெடுநகரில் - இந்தப் பெரிய நகரத்தில்; பொன் துன்றும் - பொன்னிலே பதித்த; மணிப்பூணாள் - மணிகளையுடைய ஆபரணம் அணிந்த பிராட்டி; இலள்என்ன - இல்லை என்று; நின்று - திகைத்து; எண்ணி - ஆலோசித்து; உன்னுவான் - நினைத்து; பொருமுவான் - குமுறுபவன் ஆனான். எண்ணுதல்,ஆலோசித்தல், உன்னுதல், நினைத்தல். (225) |