சீதையைக் காணாதஅனுமன் எண்ணம்

 

என்றுஎண்ணி, "ஈண்டு இனியோர்
     பயன்இல்லை என நினையா
குன்றன்னதோளவன்தன்
     கோமனைபிற்படப் பெயர்ந்தான்;
நின்று எண்ணிஉன்னுவான்
     அந்தோ !இந் நெடு நகரில்
பொன் துன்னும்மணிப் பூணாள்
     இலள்என்ன, பொருமுவான்.

     என்று எண்ணி -என்றுகருதி; இனி - இனிமேல்; ஈண்டு - இங்கே
(இருப்பதால்); ஓர் பயன் இல்லை - ஒரு பிரயோசனம் இல்லை; என -
என்று; நினையா - எண்ணி; குன்று அன்ன - மலை போன்ற;
தோளவன்தன் - தோளையுடைய இராவணனின்; கோமனை - அரண்மனை;
பிற்பட - பின்னே நிற்க; பெயர்ந்தான் - வெளியே சென்ற அனுமன்;
அந்தோ - ஐயோ; இ நெடுநகரில் - இந்தப் பெரிய நகரத்தில்; பொன்
துன்றும் -
பொன்னிலே பதித்த; மணிப்பூணாள் - மணிகளையுடைய
ஆபரணம் அணிந்த பிராட்டி; இலள்என்ன - இல்லை என்று; நின்று -
திகைத்து; எண்ணி - ஆலோசித்து; உன்னுவான் - நினைத்து; பொருமுவான்
-
குமுறுபவன் ஆனான்.

       எண்ணுதல்,ஆலோசித்தல், உன்னுதல், நினைத்தல்.       (225)