5063.. | ஏழு நூறுஓசனை சூழ்ந்து எயில்கிடந்தது இவ் இலங்கை வாழும் மா மன்உயிர், யான் காணாதமற்று இல்லை; ஊழியான்பெருந்தேவி ஒருத்தியுமேயான் காணேன் ஆழி தாய், இடர்- ஆழியிடையே வீழ்ந்துஅழிவேனோ ? |
ஏழுநூறு ஓசனை - எழுநூறு யோசனை அளவுக்கு; எயில் ஆழ்ந்து - மதிலால் சூழப்பெற்று; கிடந்தது - பரவியிருப்பதாகிய; இவ் இலங்கை - இந்த இலங்கை மாநகரில்; வாழும் - வாழ்கின்ற; மா மன்னுயிர் - சிறந்த நிலைபெற்ற பிராணிகளுள்; யான் காணாத - யான் பார்த்திராதவை; இல்லை - கிடையாது; ஊழியான் - ஊழிகளின் தலைவனான இராமபிரானின்; பெருந்தேவி - பெருந்தேவியாகிய; ஒருத்தியுமே - ஒப்பற்றவள் மட்டுமே; யான் காணேன் - நான் பார்க்கவில்லை; ஆழிதாய் - (நீர்) கடலைக் கடந்து; இடர் ஆழியிடையே - துன்பமாகிய கடலில்; வீழ்ந்து - அழுந்தி; அழிவேனோ - இறப்பேனோ. ஓசனை - நான்குகாதம். 'ஓசனை கமழும்' என்னும் சிந்தாமணித் தொடர்க்கு 'நான்கு காதம் எல்லை நாறும்' என்று இனியர் உரை வகுத்தார். மற்று - அசை. உயிர் என்றதுபிராணிகளை - உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் அந்தணன் (வனம்புகு - 22). பெருந்தேவி -பட்டத்தரசி. உடன் முடிகவித்த இயற்பெருந்தேவி (பெருங்கதை 2.4.24). (229) |