5070. | என்று,சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்; ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்; அன்று, அவ் வாள்அரக்கன் சிறை அவ் வழி வைத்த துன்று அல்ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம். |
என்று - என்று சிந்தித்து;இராகவன் தூதன் - இராமபிரானின் தூதனான அனுமன்; சோலை புக்கு எய்தினன் - சோலைக்குள் சென்று சேர்ந்தான்; (அப்போது) வானவர் - தேவலோகத்தி்ருப்பவர்; ஒன்றி பூ மழை பொழிந்தனர் - ஒன்று சேர்ந்து பூமாரி பொழிந்து; உவந்தார் - மகிழ்ச்சி அடைந்தனர்; இனி - இனிமேல்; வாள் அரக்கன் - வாள் ஏந்திய இராவணனால்; அவ்வழி சிறைவைத்த - அச் சோலையில் சிறை வைக்கப்பெற்ற; அல் துன்று ஓதிதன் - இருள் போன்ற கூந்தலையுடைய பிராட்டியின்;அன்று நிலை - அப்போதைய நிலைமையை; சொல்லுவான் துணிந்தாம் - சொல்லுவதற்குத் துணிந்தோம். அல்துன்று ஓதி -இருள் போன்ற கூந்தல். துன்று - உவமச் சொல். (சிந்தாமணி. 2490 நச்) உவமச் சொல்லாவது வினைச் சொற்களை உவம உருபு போலப் பயன்படுத்தல். (2) |