5094.

பரித்தசெல்வம் ஒழியப் படரும் நாள்,
அருத்திவேதியற்கு ஆன் குலம் ஈந்து, அவன்
கருத்தின் ஆசைக்கரை இன்மை கண்டு, இறை
சிரித்த செய்கைநினைந்து, அழும் செய்கையாள்.

     பரித்த -தன்குலத்தவரால் சுமத்தப் பெற்ற; செல்வம் - அரச செல்வம்;ஒழிய - பரதன்பால் தங்க; படரும் நாள் - காட்டுக்குச் சென்ற
காலத்தில்;அருந்தி வேதியற்கு - ஆசைமிக்க திரிசடன் என்னும்
அந்தணனுக்கு;ஆன்குலம் ஈந்து - பசுக் கூட்டங்களை வழங்கியும்; அவன்
-
அந்தஅந்தணனின்; கருத்தின் ஆசை - உள்ளத்தில் உள்ள ஆசைக்
கடலுக்கு;கரை இன்மை கண்டு - கரை இல்லாமல் இருப்பதைப் பார்த்து;
இறை -
சிறிதே; சிரித்த செய்கை - சிரித்த இராமபிரானின் செயலை;
நினைந்து -
எண்ணி; அழும் செய்கையாள் - ;

     நாடு துறந்து காடு போம்காலத்தில் திரிசடனுக்குப் பசுக்கூட்டங்கள்
வழங்கியும் அவன் ஆசை எல்லையற்றுப் போவதைக் கண்டு சிரித்த
இராமபிரானின் செயலை நினைந்து வருந்தினாள். ஒழிய - தங்கல் 'தோழன் நீ
எனக்கு இங்கு ஒழி', என்னும் பெரிய திருமொழி ஒழிய - தன்னைவிட்டு நீங்க
என்றும் பொருள் கூறலாம். (26)