5100.

'நலம் துடிக்கின்றதோ ? நான் செய் தீவினைச்
சலம் துடித்து,இன்னமும் தருவது உண்மையோ ? --
பொலந் துடிமருங்குலாய் ! - புருவம், கண், முதல்
வலம்துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன்.

     பொலந்துடிமருங்குலாய் - பொன்னால் செய்யப்பெற்ற உடுக்கை
போன்ற இடையை உடைய திரிசடையே; புருவம், கண் முதல் - புருவமும்,
கண்ணும், முதலியன; வலம் துடிக்கின்றில - வலப்பக்கம் துடிக்கவில்லை;
நலம் துடிக்கின்றதோ -
நன்மை என்னையடையத் துடித்துக்கொண்டுள்ளதோ
(அல்லது); நான் செய் - நான் முன்பு செய்த; தீவினைச் சலம் -
தீவினையால் எழுந்த கொடுமை; துடித்து - துடிதுடித்து (என் பக்கம் வந்து);
இன்னமும் தருவது -
இதற்கு மேலும் தரக்கூடிய துன்பம்; உண்மையோ ? -
உள்ளதா?; வருவது ஓர்கிலேன் - இனிமேல் நிகழ்வதை ஆராய முடியாமல்
உள்ளேன்.                                                (32)