திரிசடை நற்குறிப்பயன் கூறுதல்

5104.

என்றலும்,திரிசடை, 'இயைந்த சோபனம் !
நன்று இது ! நன்று!' எனா, நயந்த சிந்தையாள்,
'உன் துணைக்கணவனை உறுதல் உண்மையால்;
அன்றியும்,கேட்டி' என்று, அறைதல் மேயினாள்.

     என்றலும் -என்றுபிராட்டி கூறியதும்; நயந்த சிந்தையாள் - அன்பு
நிரம்பிய உள்ளமுடைய; திரிசடை - திரிசடையானவள் (பிராட்டியை நோக்கி);
சோபனம் இயைந்த -
(உனக்கு) மங்களங்கள் வந்துள்ளன; இது நன்று
நன்று -
இக் குறி நல்லது நல்லது; எனா - என்று கூறி வாழ்த்தி; உன்
துணைக் கணவனை -
உன்னுடைய துணைவனான நாயகனை; உறுவது
உண்மை -
அடைவது சத்தியம்; அன்றியும் - அல்லாமலும்; கேட்டி என்று
-
யான்
கூறுவதைக் கேள் என்று;அறைதல் மேயினாள் - சொல்லத்
தொடங்கினாள்.

    சிந்தையாள் -குறிப்புமுற்று, பெயரெச்சமாய் திரிசடை என்னும் பெயர்
கொண்டது. அன்றி, சிந்தையை உடையவளாய் அறைதல் மேயினாள் என்று
கூறுதலும் நன்று. (உண்மை) ஆல். அசை. சோபனம் - மங்களச் சொல் 'ஏழை
சோபனம்' என்பது அனுமன் வாழ்த்து (கம்ப. 9967.)                (36)