5108.

'எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத்
திண் நெடுங்கழுதை பேய் பூண்ட தேரின்மேல்,
அண்ணல் அவ்இராவணன், அரத்த ஆடையன்,
நண்ணினன்,தென்புலம் - நவை இல் கற்பினாய் !'

     நவை இல்கற்பினாய் - குற்றமற்ற கற்புடையபிராட்டியே; அண்ணல்
வேல் இராவணன் -
சிறந்த வேலேந்திய இராவணன்; பொன்முடிதொறும்
எண்ணெய் இழுகி -
அழகிய பத்துத்
 தலைகளிலும் எண்ணெய்பூசிக்கொண்டு;
இரத்த ஆடையன் - சிவந்த ஆடையை அணிந்தவனாய்; கழுதை பேய்
பூண்ட -
கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற; ஈறு இலா - சென்று
சேரும் இறுதியை அறியாத; திண் நெடும் தேரின் மேல் - திண்மையான
பெரிய தேரிலே (ஏறி); தென் புலம் நண்ணினன் - தெற்குத் திசையை
அடைந்தான்.

     வாள் அரக்கன்என்று திருமுறைகள் பேசும். கம்பரும் அங்ஙனமே
கூறுவார். கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லல் தென்
திசையில் போதல் முதலியன கேட்டுக்கு அறிகுறி. வால்மீகத்தில் திரிசடை
அரக்கியர்பால் கூறுகிறாள்.                                   (40)