5132.

'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் !
மடக் கொடிசீதையாம் மாதரேகொலாம் ?
கடல் துணை நெடியதன் கண்ணின் நீர்ப் பெருந்
தடத்திடைஇருந்தது ஓர் அன்னத் தன்மையாள்.

     கடல் துணை நெடிய- கடல்போலப் பரந்துள்ள; தன் கண்ணின் நீர்-  தன்னுடைய கண்ணிலிருந்து வழிந்த நீர் நிரம்பிய; பெருந் தடத்து
இடை-
பெரிய தடாகத்தின் நடுவில்; இருந்தது -  இருந்த; ஓர்அன்னத்
தன்மையள் -
ஒப்பற்ற அன்னத் தன்மை கொண்டவள்; கடக்க அரும் -
கடந்து போக முடியாத; அரக்கியர் - அரக்கிகளின்; காவற் சுற்றுளாள் -
 காவற் சுற்றிலே அகப்பட்டுள்ளாள் (ஆதலால், இவள்); மடக்கொடி -
இளங்கொடி போன்ற; சீதை ஆம் - சீதையாகிய; மாதரே கொல்? -
பெண்ணே போலும்.

     கொல் என்பதைஅசையாக்கி மாதரே ஆம் என்று பொருள்
கொள்வாரும் உளர் அடுத்துவரும் பாடல்தான் அனுமனின் ஐயத்தைப்
போக்குகிறது.                                            (64)