5139. | "கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம்எனின், ஆழியான் முனிவுஎனும் ஆழி மீக்கொள, ஊழியின் இறுதிவந்துறும்" என்று உன்னினேன்; வாழிய உலகு, இனிவரம்பு இல் நாள் எலாம் ! |
கேழ் இலாள் -ஒப்புமையற்ற பிராட்டியின்; நிறை இறை கீண்டது ஆம் எனில் - நிறையானது சிறிது சிதைந்தாலும்; ஆழியான் - (சக்கரம் ஏந்திய) திருமாலாகிய இராமபிரானின்; முனிவு எனும் ஆழி - கோபம் என்னும் கடலானது; மீகொள - மேலே அதிகரித்துப் பொங்குதலால்; ஊழியின் இறுதி - யுகத்தின் முடிவுக்காலம்; வந்து உறும் என்று - வந்து விடுமே என்று; உன்னினேன் - எண்ணி அஞ்சினேன் (நிறை அழியாமையால்); இனி - இனிமேல்; உலகு - உலகங்கள்; வரம்பு இ்ல் நாள்எலாம் - எல்லையற்ற எல்லா நாட்களிலும்; வாழிய - வாழ்வடைக. நிறை -மனத்தைக் கட்டுப்படுத்தல். இறைவன் கோபம் கொள்ளாமல் 'பிராட்டி அடக்கி வெல்வாள்' என்று கூறுவர் சிலர். நிறை - கரை போன்றது.அன்றியும் மகளிரின் நால்வகைப் பண்புகளில் ஒன்றான நிறை என்றும் கூறலாம். கீண்டது ஆம் என்று - ஆம் அசை. உன்னுதல் - அஞ்சுதல். காரியத்தைக் காரணமாகக் கூறப்பெற்றது. (71) |