5143.

தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்
கருமமேகாத்ததோ? கற்பின் காவலோ ?
அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?

(பிராட்டியின்தவத்தை)

    தருமமேகாத்ததோ - தருமமே பாதுகாத்ததோ ? சனகன் -
சனகனுடைய; நல்வினைக் கருமமே - நல்லூழால் செய்யப்பெற்ற செயல்;
காத்ததோ - பாதுகாத்ததோ ? கற்பின் காவலோ - கற்பினுடைய பாதுகாப்பா? (இத்தவம்) அருமையே அருமையே - அருமையானது
அருமையானது;இது - இப்படிப்பட்ட தவத்தை; யார் ஆற்றுவார் - எவர்கள்
செய்வார்கள் ?(இத்தவம்); ஒருமையே
 - ஒப்பற்றசிறப்புடையது;
எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ - எம் போன்றவர்கள் சொல்லும்
தன்மை உடையதோ.                                        (75)