515.

வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ.

     மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல்.                (19-15)