5151.

தோள்தொறும் தொடர்ந்த, மகரிகை வயிரக்
     கிம்புரி வலய மாச் சுடர்கள்
நாள்தொறும்சுடரும் கலி கெழு விசும்பில்,
     நாளொடுகோளினை நக்க,
தாள்தொறும்தொடர்ந்த தழங்கு பொற்கழலின்
     தகை ஒளிநெடு நிலம் தடவ,
கேள்தொறும்தொடர்ந்த முறுவல் வெண் நிலவின்
     முகமலர்இரவினும் கிளர;

     தோள் தொறும் -தோள்கள்தோறும்; தொடர்ந்த - அணியப்பெற்ற;
மகரிகை - சுறாமீன் வடிவமாக அமைந்த; வயிர - வயிரம் பதிக்கப் பெற்ற;
கிம்புரி வலயம் -
 தோள் வலயத்தினுடைய; மாச்சுடர்கள் - சிறந்த ஒளிகள்;கலிகெழு விசும்பில் - ஒலிக்கு ஆதாரமாகிய ஆகாயத்தில்; நாள்
தொறும் -
தினந்தோறும்; சுடரும் - விளங்குகின்ற; நாளொடு கோளினை
-
நட்சத்திரங்களையும் கிரகங்களையும்; நக்க - அடக்கவும்; தாள் தொறும்
-
பாதங்கள் தோறும்; தொடர்ந்த - அணியப்பெற்ற; தயங்கு - ஒளிவீசும்;
பொன்கழலின் -
அழகிய வீரக் கழலின்; தகை ஒளி - சிறந்த ஒளி;
நெடுநிலம் தடவ -
பெரிய பூமியை அளவளாவவும்; கேள் தொறும் -
எல்லாச் சுற்றத்தினரோடும்; தொடர்ந்த - இடைவிடாது செல்லும்; முறுவல்
வெள்நிலவின் -
 புன்னகையின் வெள்ளிய நிலவால்; முகமலர் -
(இராவணனின்) முகமாகிய மலர்; இரவினும் கிளர - இரவுப் போதிலும்
விளங்கித் தோன்ற.

    கோளினை நக்கஎன்ற தொடரில் உள்ள 'நக்க' என்பது 'அடக்க'
எனப்படும் பொருள் தந்தது. பால்நக்க தீஞ்சொல்  - மான் நக்க நோக்கின்
மடவார் (சிந்தாமணி -கனகமாலை 310) நாள் நட்சத்திரம். கோள் - கிரகங்கள்.
வயிரக்கிம்புரி - தோள்வலயம் (வாகுவலயம்)                        (83)