5157. | அன்ன பூஞ்சதுக்கம், சாமரை, உக்கம் ஆதியாம்வரிசையின் அமைந்த, உன்னரும்பொன்னி்ன், மணியினின் புனைந்த இழைக்குலம், மழைக் கருங் கடைக் கண், மின் இடை, செவ்வாய், குவி முலை, பணைத் தோள் வீங்குதேர் அல்குலார் தாங்கி, நல் நிறக்காரின் வரவு கண்டு உவக்கும் நாடகமயில் என நடப்ப; |