| 5158. | தந்திரிநெறியில் தாக்குறு கருவி தூக்கினர்எழுவிய சதியின், முந்துறு குணிலோடுஇயைவுறு குறட்டில், சில்லரிப்பாண்டிலில், முறையின், மந்தர கீதத்துஇசைப் பதம் தொடர, வகை உறுகட்டளை வழாமல், அந்தர வானத்துஅரம்பையர், கரும்பின் பாடலார்,அருகு வந்து ஆட; |
தந்திரிநெறியில் - யாழ்நூல் முறைப்படி;தாக்குறு கருவி - தாக்கப்படு்ம் தாளத்தை; தூக்கினர் - தாங்கியவர்கள்; எழுவிய - எழுப்பிய (அமைத்த); சதியின் - தாளசதியின் படியும்; முந்துறு குணிலோடு இயைவுறு - முற்படும் குறுந்தடியுடன் தொடர்புடைய; குறட்டில் - குறடு என்னும் பறையின்படியும்; சில்லரி (இன்) - சில்லரியின்படியும்; பாண்டிலின் - பாண்டிலின்படியும்; முறையின் - மரபுப்படி; மந்தரம் - மந்த ஓசை; இசை- பொருந்திய; கீதத்துப்பதம் - கீதத்தில் ஒருவகையான பதம்; தொடர - தொடரவும் (அதற்கேற்ப); அந்தரவானத்து அரம்பையர் - மேல் உள்ள விண்ணுலகத் தேவ மகளிர்; வகையுறு - பல்வகையான; கட்டளை வழாமல் - விதி பிறழாதபடி; கரும்பின் பாடலார் - கரும்பு போலப் பாடுபவர்; அருகு உவந்து - பக்கத்தில் மகிழ்ந்து; ஆட - ஆடவும். சதியில்,குறட்டில், பாண்டிலில் பதம் தொடர, கட்டளை வழாமல் ஆட, என அமைக்க. குறடு - ஒருவகைப் பறை. 'தழங்கு பேரியும் குறட்டொடு பாண்டிலும்' (கம்ப. மிசை. 107) குறடுமாப் பேரி கொட்டி (பிரமாத்திர 3) சில்லரி பாண்டில் (கம்ப. 5156. குறிப்புரை) பதம் - இசைப்பாட்டுவகை.பதங்களில் தண்ணுமை பாணி பண்ணுற.... சதி மிதிப்பவர் (கம்ப. 144) (90) |