5173.

'பூந் தண்வார் குழல் பொன் கொழுந்தே ! புகழ்
ஏந்து செல்வம்இகழ்ந்தனை;
இன் உயிர்க்
காந்தன்மாண்டிலன், காடு கடந்து போய்,
வாய்ந்து வாழ்வதுமானிட வாழ்வு அன்றோ ?

     பூந்தண்வார்குழல் -  பூவணிந்த குளிர்ந்த நீண்ட கூந்தலையுடைய;
பொன் கொழுந்தே ! -
பொன்னின் கொழுந்து போன்றவளே ! நீ; புகழ்
ஏந்து -
புகழைத் தாங்கிய; செல்வம் - என்னுடைய செல்வத்தை;
இகழ்ந்தனை -
அவமதித்தாய்; இன்உயிர்க் காந்தன் - (உன்னுடைய) உயிர்
போன்ற கணவன்; மாண்டிலன் - (என்னால்) இறவாமல் (தப்பி); காடு கடந்து
-
காடுகளைத் தாண்டி; போய் - அயோத்திக்குச் சென்று; வாய்ந்து - அரசு
கிடைக்கப் பெற்று; வாழ்வது - வாழும் வாழ்வு; மானிட வாழ்வன்றோ -
மனித வாழ்க்கை அல்லவா.

    இராவணன்"அரம்பை மாதர் ..... ஏவல் செய்ய உலகம் ஈரேழும்
ஆளும் செல்வத்துள் உறைதி' என்று முன்பு பேசுகிறான் (கம்ப. 3384) (105)