5175. | 'பொருளும், யாழும், விளரியும், பூவையும், மருள, நாளும்,மழலை வழங்குவாய் ! தெருளும் நான்முகன் செய்தது, உன் சிந்தையின் அருளும், மின்மருங்கும், அரிது ஆக்கியோ ? |
பொருளும் -குழந்தைகளும்; யாழும் - யாழும்; விளரியும் - விளரிப்பண்ணும்; பூவையும் - நாகணவாய்ப் பறவையும்; மருள - ஏக்கமடைய; நாளும் - தினமும்; மழலை வழங்குவாய் - மழலை மொழி பேசுபவளே ! தெருளும் - தெளிவடைந்த; நான்முகன் - பிரம்மதேவன்; உன்சிந்தையில் - உன் உள்ளத்தில்; அருளும் - கருணையையும்; மின் மருங்கும் - மின்னல் போலும் இடையும்; அரிது ஆக்கியோ - இல்லாமல் ஆக்கிய பிறகோ; செய்தது - படைத்தது. பொருள் -குழந்தை. 'தம் பொருள் என்ப தம் மக்கள்' (குறள்.63) சுந்தரமூர்த்திசுவாமிகள் சுவை நயம் மிக்க கலய நல்லூர்ப் பதிகத்தில் "பெரும்பலம துடை அசுரன் தாரகனைப் பொருது - பொன்று வித்த பொருளினை முன் படைத்து கந்த புனிதன்" என்றார் (திருமுறை 7. 16-9) அரிது - என்பது இன்மைப் பொருள் தந்தது. 'அருங்கேடன்' என்பது அறிக. என்னும் குறளின்(210) குறிப்பில் அருளும் இன்மை என்று அழகர் எழுதுகிறர். "ஈயா மாக்கள் தீ மொழி கவர்ந்த சிற்றிடை" என்பர் குமரகுருபரர். (107) |