5181.

'தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தா இல் மூஉலகின்தனி நாயகம்
மேவுகின்றது,நுன்கண்; விலக்கினை;
ஏவர் ஏழையர்நின்னின், இலங்கிழாய் ?

     இலங்கிழாய் ! -விளக்கமான ஆபரணம் அணிந்த பெண்ணே; தேவர்
-
தேவர்களும்; தேவியர் - தெய்வப் பெண்களும்; சேவடி கை தொழும் -
உன் சிவந்த அடிகளைக் கை கூப்பி வணங்கும்படியான; தாவு இல் - அழிவு
இல்லாத; மூ உலகின் - மூன்று உலகங்களின்; தனி நாயகம் - ஒப்பற்ற
தலைமைப் பதவி; நுன்கண் மேவுகின்றது - உன்பால் வந்து சேர்கின்றது;
விலக்கினை -
அதனை ஒதுக்கி விட்டாய்; நின்னின் - உன்னைப் போல;
ஏழையர் -
அறிவற்றவர்கள்; ஏவர் - யாவர்.

     நாயகம் -தலைமைப் பதவி. மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே
(திருவாய்மொழி - 3.10.11) தாவு - அழிவு தாவா நல்லறம் (சிலம்பு 30;125)
ஏழை - அறிவற்றவர். "ஏமுற்றவரினும் ஏழை ..... பகை கொள்பவன்" (குறள்
873)                                                    (113)