5182.

'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி;அருளுதியால்' எனா,
முடியின் மீதுமுகிழ்ந்து உயர் கையினன்,
படியின்மேல்விழுந்தான், பழி பார்க்கலான்.

     பழிபார்க்கலான் - தன்பால் வரும்பழியைப்பாராத இராவணன்;
மூன்று உலகும் - மூன்று உலகத்தவர்களையும்; குடிமை செயும் -
குடிமக்களாக வைத்து ஆளும்; கொற்றத்து - வெற்றியைப் பெற்ற; என் -
என்னுடைய; அடிமை - அடியனாம் தன்மையை; கோடி - கொள்க;
அருளுதியால் எனா - அருள்வாயாக என்று கூறி; முடியின்மீது -
தலைகளின் மேல்; முகிழ்த்து - குவித்து; உயர் கையினன் - உயர்ந்த
கைகளை உடையவனாய்; படியின்மேல் - பூமியி்ன் மேல்; விழுந்தான் -
விழுந்து வணங்கினான்.

     குடிமை -குடிமக்கள். அடிமை என்றும் கொள்ளலாம். குடிமை செயும்
கொடும் புலையன் (அரிச்சந்திரபுராணம் சூழ்வினை - 70) அடிமை - தொண்டு.
என்றார்க்கு 'அடிமை புகுத்திவிடும்' என்னும் குறட் பகுதிக்குக் (608) காலிங்கர்
'பகை வேந்தர்க்குத் தான் ஏவல் கேட்டுப் பணிந்து ஒழுகும் அடிமை
புகுத்திவிடும் என்று விளக்கம் செய்தார். அழகர் அடிமை - அடியனாம்
தன்மை என்பர். அருளுதியால் - இதில் உள்ள ஆல் அசை.         (114)