| 5188. | 'தோற்றனைபறவைக்கு அன்று; துள்ளு நீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால்வென்றாய்; அன்றுஎனின், இறத்தி அன்றே ? நோற்ற நோன்பு,உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்தஎல்லாம், கூற்றினுக்கு அன்றே ? வீரன் சரத்திற்கும் குறித்தது உண்ே்டா ? |
அன்று - அக்காலத்தில்;பறவைக்கு - சடாயுவுக்கு; தோற்றனை - தோற்றுப் போனாய்; துள்ளு நீர் - செருக்குப் பண்பைப் பெற்ற; வெள்ளம் - (கங்கையின்) வெள்ளத்தை; சென்னி ஏற்றவன் - சடையில் தாங்கிய சிவபெருமானின்; வாளால் - வாள் கொண்டு; வென்றாய் - வெற்றி பெற்றாய்; அன்று எனின் - (வாள்) இல்லை என்றால்; அன்றே - அன்றைய தினமே; இறத்தி - இறந்து போயிருப்பாய்; நோற்ற நோன்பு - மேற்கொண்ட தவம்; உடைய வாழ் நாள் - பெற்ற ஆயுள்; வரம் - வரம் (ஆகிய); இவை - இவையும்; நுனித்த எல்லாம் - ஆராய்ந்து பெற்ற பிற யாவும்; கூற்றினுக்கு அன்றே - கூற்றுவன் வராமல் தடுக்கவே அல்லாமல்; வீரன் சரத்திற்கும் - இராமபிரானின் அம்புக்கும்; குறித்தது உண்டோ - (தடையாக) வரையறுக்கப்பட்டதா ? துள்ளுதல் -செருக்குக் கொள்ளுதல். துள்ளும் இருவர்க்கும் (தேவாரம் 91-9) கங்கையை 'வெள்ளம்' என்று திருமுறை பேசும். வெள்ளநீர்ச் சடையர்போலும் (தேவாரம் 68 - 1) நுனித்தல் - ஆராய்தல். குறித்தல் - வரையறுத்தல். கணித்தலும் குறித்தலும் - வரையறுத்தற் பொருட்டாமே (பிங்கலம் 1777) (120) |