அறுசீர்விருத்தம்

 5210.

'கொல்வென் என்று உடன்றேன்; உன்னைக்
கொல்கிலென்; குறித்துச் சொன்ன
சொல் உள;அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச்
                                 சொல்லின்,
"ஒல்வது ஈது; ஒல்லாதுஈது" என்று, எனக்கும் ஒன்று
                         உலகத்து உண்டோ ?
வெல்வதும்தோற்றல்தானும் விளையாட்டின் விளைந்த,
                         மேல்நாள்.

     உன்னைக்கொல்வென் - உன்னைக் கொன்றுவிடுவேன்; என்று
உடன்றேன் -
என்று சீற்றம் கொண்டேன்; கொல்கிலேன் -
கொல்லமாட்டேன்; குறித்துச் சொன்ன - நீ என் மேல் கூறிய; அவற்றுக்கு
எல்லாம் -
அந்தக் குற்றங்கட்கு; காரணம் தெரியச் சொல்லின் -
காரணத்தை விளங்கக் கூறக் கருதின்; சொல் உள - (அதற்கேற்ற) சொற்கள்
உள்ளன; ஈது ஒல்வது - இச் செயல் என்னால் நிறைவேற்றக் கூடியது;
ஒல்லாது ஈது - இச் செயல் என்னால் நிறைவேற்ற முடியாதது; என்று ஒன்று
-
என்று வரையறுத்துக் கூறும் ஒரு செயல்கள்; எனக்கும் - பேராற்றல்
படைத்த எனக்கும்; உலகத்து உண்டோ - உலகில் உள்ளதா ? மேல்நாள் -
முற்காலத்தில்; வெல்வதும் - (பகைவர்) வெற்றி பெறுவதும்; தோற்றல் தானும்- தோல்வியடைந்ததும்; விளையாட்டின் விளைந்த -
விளையாட்டைப் போல நிகழ்ந்தன.

     தோற்றது,கார்த்த வீரியன் பால் 'நான் விளையாட்டாகத் தோற்றேன்,
உண்மையில் தோற்கவில்லை'. என்பது இராவணனின் போலிவார்த்தை. (142)