5213.

'வென்றோரும் இருப்ப; யார்க்கும் மேலவர், விளிவு
                                  இலாதோர்,
என்றோரும்இருப்ப; அன்றே, இந்திரன் ஏவல் செய்ய,
ஒன்றாக உலகம்மூன்றும் உணர்கின்ற ஒருவன்,
                                  யானே !
மென்தோளாய் !இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது
                                  உண்டோ ?

     மென் தோளாய் !- மெல்லிய தோளையுடையவளே; வென்றோரும்
இருப்ப -
என்னை வென்ற வாலி முதலானோர் இருக்கவும்; யார்க்கும்
மேலவர் -
எவர்க்கும் மேலாய மும்மூர்த்திகளும்; விளிவு இலாதோர்
என்றோரும் இருப்ப -
அழிவற்றவர் என்று பேசப்படும் தேவர்களும்
இருக்கவும்; அன்றே - அந்த நாளிலிருந்து; இந்திரன் ஏவல் செய்ய -
இந்திரன் அடிமைப் பணி செய்ய; உலகம் மூன்றும் - மூன்று
உலகங்களையும்; ஒன்றாக உணர்கின்ற - ஒரு சேர ஆட்சியுணர்வு
செய்கின்ற; ஒருவன் - ஒப்பற்றவன்; யானே - யானே ஆவேன் இதற்கு -
இவ்வாறு யான் ஆள்வதற்கு வேறு ஓர் காரணம் - பிறிதொரு காரணத்தை;
விரிப்பது உண்டா - விளக்கிக் கூறுவதற்குள்ளதா ?

     என்னினும்மேலானவர் இருப்பின் அவர்கள் என்னை
அடக்கியிருக்கலாமே. அவ்வாறு நேராமையின் யானே பெரியவன் என்பது
இராவணன் எண்ணம்.                                       (145)