5215.

'சிற்றியல், சிறுமை ஆற்றல், சிறு தொழில்,
                             மனிதரோடே
முற்றிய தா இல்வீர முனிவு என்கண்
                           விளையாதேனும்,
இற்றை, இப்பகலில், நொய்தின், இருவரை ஒரு
                            கையாலே
பற்றினென்கொணரும் தன்மை காணுதி;-பழிப்பு
                           இலாதாய் !

     பழிப்பு இலாதாய்! - பழித்துப் பேசப்படாதவளே ! சிற்றியல் -
சிறுமைப் பண்பும்; சிறுமை ஆற்றல் - அற்பசக்தியும்; சிறுதொழில் - இழி
தொழிலும் (பெற்ற); மனிதரோடே - மனிதர்கள்பால்; முற்றிய தா இல் வீரம்
-
முதிர்ந்த குற்றமற்ற வீரத்துடன் கூடிய; முனிவு - கோபம்; என்கண்
விளையாதேனும் -
என்னிடம் தோன்றாது என்றாலும்; இற்றைஇப்பகலில் -
இன்றைய தினத்தில் இந்த முகூர்த்தத்தில்; நொய்தின் - எளிதாக; இருவரை
-
இராமலக்குவரை; ஒரு கையாலே - ஒரு கையாலே; பற்றினென்
கொணருந்தன்மை -
பிடித்துக் கொண்டு வரும் என் வலிமையை; காணுதி -
பார்ப்பாயாக.

     மனிதரோடு முனிவுஎன்கண் விளையாது என்று சேர்க்க. பகல் -
முகூர்த்தம். பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - என்று குறள் (49) பேசிற்று.
இராவணனே பிராட்டியைப் பழிப்பிலாதாய், என்றான். இராவணன், தன்னை
மனிதனாக நினைந்ததே இல்லை. மனித குலத்தினும் மேம்பட்டது தன்குலம்
என்று பேசுவதை யாண்டும் காணலாம்.                           (147)