5232.

'தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர்; எனதுஆவி அறிந்திலிரோ ?
நிழல் வீரைஅனானுடனே நெடு நாள்
உழல்வீர்;கொடியீர் ! உரையாடிலிரோ ? +

     கொடியீர் -மதிமுதலிய கொடியவர்களே (நீங்கள்); தழல்வீசி -
நெருப்பைப் பரப்பி; உலா வரு - திரிந்து வருகின்ற; வாடை தழீஇ -
வாடைக்காற்றைத் தழுவி; அழல்வீர் - (என்னைச்) சுடுகின்றீர்; எனது ஆவி
அறிந்திலிரோ -
என் உயிரின் தன்மை அறியீரோ;

நிழல்வீரை அன்னானுடனே- ஒளிவீசும் கடல்போன்ற இராமனுடன்;
நெடுநாள் உழல்வீர் -
நீண்ட நாட்கள் பழகியிருக்கிறீர்கள்; உரையாடிலிரோ
-
(உயிர்பற்றிப்) பேசவில்லையோ.

     நீங்கள்இராமனுடன் பேசியிருந்தால் அவர் என் உயிரின் இயல்பைக்
கூறியிருப்பார். நீங்கள் என்னை வருந்தீர். நீங்கள் அவனுடன் அதுபற்றிப்
பேசவில்லையோ, பிரிந்தாரை வாட்டும் மதி முதலானவை காவிய நாயகர்களால்
இகழப்படும் - நைடதம் முதலானவற்றில் இதைக் காணலாம். வீரை - கடல் -
செழுந்தென்றல் அன்றில் .... திரைவீரை என்மேல் பகையாட ஆடும்.
(திருமாளிகைத் தேவர் - உறவாகிய யோகம். 5                      (5)