5234.

'தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ;
வருவென சில நாளினில்; மா நகர்வாய்
இரு" என்றனை;இன் அருள்தான் இதுவோ ?
ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ? +

(ஐயனே)

     தரு ஒன்றிய -மரங்கள் சேர்ந்துள்ள; கான் அடைவாய் - காட்டை
அடைய விரும்புபவளே; நீ தவிர் - நீ அந்த எண்ணத்தை விடு; சில
நாளினில் -
சில தினங்களிலே; வருவென் - (நான்) திரும்பி வருவேன்;
மாநகர்வாய் - பெரிய நகரின் கண்ணே; இரு - (அதுவரை) இருப்பாபாக;
என்றனை -
என்று கூறினாய்; இன் அருள் இதுவோ - உனது இனிய
கருணை இப்படிப்பட்டதோ? ஒருவென் -  தனித்துள்ள என்னுடைய; தனி
ஆவியை -
ஆதாரம் இல்லாத உயிரை; உண்ணுதியோ - உண்ணுகின்றாயோ.

     அடைவாய் -அடையும் சமயத்தில் என்றும் கூறலாம். 'நான் கானகம்
வந்தால் துன்புறுவேன் என்று என் வருகையை மறுத்த நீ இன்று நான்
சிறையில் இருக்கும் போது வாராமல் உள்ளாய். உன் அருள்
இப்படிப்பட்டதோ' என்றாள். உயிர் உண்ணுதல் - உயிரை வாட்டுதல். உருக்கி
என் உயிரொடும் உண்டு போனவன். (கம்ப. 533) என்று முன்பு பேசுகிறாள்.
இறைவனுக்கு உயிருண்ணி என்னும் பெயர் உள்ளதை அறிக. (திருவாசகம்)
தான் - உரையசை.                                          (7)