என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள், மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்; 'ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான் பொன்றும்பொழுதே, புகழ் பூணும்' எனா,
மின்துன்னும் -மின்னலைஒத்திருக்கும்; மருங்குல் - இடையையும்; விளங்கு இழையாள் - விளங்கும் ஆபரணத்தையும் உடைய பிராட்டி; என்று என்று - என்று பலவாறு நினைந்து; உயிர் விம்மி - பெருமூச்சுவிட்டு; அழிவாள் - வருத்தம் அடைவாளாகிய பிராட்டி; இருந்து - உறுதிபெற்று; ஒன்று - என்னுடன் ஒன்றுபட்டுள்ள; என் உயிர் உண்டு எனின் - என் உயிர் இருந்தது என்றால்; இடர்உண்டு - துன்பம் உள்ளதாகும்; யான் - நான்; பொன்றும் பொழுதே -இறக்கும்சமயத்தில்தான்; புகழ் பூணும் - புகழ் என்னைச் சேரும்; எனா - என்று கருதி.
துன்னும் - உவமவாசகம் - வட நூலார் வேற்றுமை உருபை ஆர்த்தி என்றும் கூறுவர் (பிரயோக விவேகம்) இருந்து - வைராக்கியம் பெற்றது. இழையாள் அழிவாள் - அழிவாள் முற்றெச்சம். எனா - செயா எனும் வாய்பாட்டுச் சொல். என்று எனும் பொருள் தரும். 'இறந்தால் துன்பம் நீங்கும் என்று நினைப்பது முறையல்ல' என்பதைப் பிராட்டியின் மூலம் அறிய இவ்வண்ணம் பேசப்பெற்றது போலும். (10)