5273.

'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால் வரை
வெருவுற விரிந்துஉயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அறநோற்றனள் என்னின், பின்னை, அத்
திருவினின் திருஉளார் யாவர் ? தெய்வமே !

     தெய்வமே ! -பிராட்டியே; பொருவு அரு - ஒப்பற்ற; பொலன்
கொள் -
அழகைக் கொண்ட; மரகதமால் வரை - மரகத மலையானது;
வெருவற - அஞ்சும்படி; விரிந்து  உயர் - பரந்து உயர்ந்துள்ள; விலங்கல்
ஆகத்தை -
மலைபோன்ற திருமார்பை; பிரிவு அற - பிரிதல் இல்லாமல்
(அங்கே வாழ); நோற்றனள் என்னில் - திருமகள் தவம் செய்தாள் என்றால்;
அத்திருவினில் - அந்தத் திருமகளைவிட; பின்னை யாவர் திருவுளார் -
பிறகு எவர் பேறு பெற்றவர்.

     பின்னை,விலங்கல் ஆகத்தைப் பிரிவு அற நோற்றனள் என்னின்
திருவினும் யாவர் திருவுளார் எனமுடிக்க. பின்னை என்றற்கு பிறகு என்றே
பொருள் கூறப்பெற்றது. பின்னை - திருமகள். பின்னை மணாளனை பேரிற்
கிடந்தாளை (பெரியாழ்வார் 2-5-1) இது கிருஷ்ணாவதாரத்துக்குப் பிற்பட்ட
வழக்கு - இராமாவதாரத்தில் அனுமன் கூற்றில் பொருந்தாது. பிராட்டியைத்
தெய்வம் என்றான்.
 சீதை என்பதோர்தெய்வம். என்பர் திருமங்கை மன்னர்
(பெரிய திருவடி 10-2-5)                                    (46)