| 5276. | 'திரண்டில;ஒளி இல; திருவின் சேர்வு இல; முரண் தரு மேருவில் முரிய மூரி நாண் புரண்டில; புகழ் இல; பொருப்பு என்று ஒன்று போன்று இரண்டு இல;புயங்களுக்கு உவமம் ஏற்குமோ ?* |
(தோள் மலைகள்போன்றது எனின்) பொருப்பு -மலைகள்;திரண்டில - திரட்சியைப் பெறவில்லை; ஒளி இல - ஒளியைப் பெறவில்லை; திருவின் சேர்வு இல - திருமகளின் சார்பு இல்லை; முரண்தரு - வலிமைமிக்க; மேருவில் முரிய - மேருவாகிய வில் இற்றுப் போக; மூரி நாண் புரண்டில - வலியநாண் புரளப் பெறவில்லை; புகழ்இல - புகழைப் பெறவில்லை; ஒன்று போன்று என்று - ஒன்று ஒன்றைப் போல; இரண்டில - இரண்டு கிடையாது; (ஆதலின் மலைகள்) புயங்களுக்கு - இராமபிரானின் தோள்களுக்கு; உவமை - ஒப்புமை; ஏற்குமோ - பொருந்துமோ ? பொருப்பு, இல்,புயங்களுக்கு உவமை ஏற்குமோ' என்று முடிக்க. பொருப்பு - எழுவாய். (49) |