5293.

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்;
                           சிரத்தால்
தாங்கினள்;மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்
                           தோள்
வீங்கினள்;மெலிந்தனள்; குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்;உயி்ர்த்தனள், இது இன்னது எனல்
                           ஆமே ?

(பிராட்டிமோதிரத்தை)

     வாங்கினள் -எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில்
வைத்தனள் -
தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால்
தாங்கினள் -
தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை
ஒற்றினள் -
மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள்
வீ்ங்கினள் -
பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் - இளைத்தாள்;
குளிர்ந்தனள் - குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் -
வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள் - பெரு மூச்சு விட்டாள்; இது
(பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ - இன்ன
மெய்ப்பாடு என்று கூற முடியுமா.

     எண்வகைமெய்ப்பாடுகளுள், பிராட்டியின் மெய்ப்பாடு இன்னது என்று
கூறவியலுமா. இவள் நிலை இதுதான் என்று வரையறுத்துக் கூறல் இயலாது.
                                                     (66)