'கன்மத்தைஞாலத்தவர் யார் உளரே கடப்பார் ? பொன் மொய்த்ததோளான், மயல் கொண்டு புலன்கள் வேறாய், நல் மத்தைநாகத்து அயல் சூடிய நம்பனேபோல், உன்மத்தன்ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான்.
பொன் மொய்த்ததோளான் - திருமகள் தங்கியதோள்களை உடைய இராமபிரான்; ஒன்றும் - சிறிதும்; தனை உணர்ந்திலாதான் - தன்னை அறிந்து கொள்ளாமல்; மயல் கொண்டு - பிராட்டியின் பால் காதல் மிகுந்து; புலன்கள் வேறு ஆய் - ஐம்புலன்களும் நிலைதிரிந்து (உமையைப் பிரிந்த); நல்மத்தம் - நல்ல ஊமத்தம்பூவையும்; நாகத்து அயல் - பாம்பின் அருகில்;சூடிய - அணிந்த; நம்பனே போல் - சிவபிரானைப் போல; உன்மத்தன்ஆனான் - பித்தம் பிடித்தவன் ஆனான்;(ஆகையால்) ஞாலத்தவர் - உலகில்உள்ளவர்களுள்; கன்மத்தை - வினையின் நுகர்ச்சியை; கடப்பார் - வெற்றிகொண்டவர்; யார் உளர் - எவர் உள்ளனர்.
கடப்பார் -வெற்றி கொள்பவர். கடப்பார் எவரோ கருவினையை என்பர் புகழேந்தியார். மொய்த்தல் - தங்குதல் (இருத்தல்) மொய்த்தல் என்பது கொடுத்தலும் இருத்தலும் (அகராதி நிகண்டு. மொம் முதல் 5) சிவபிரானைப் பித்தன் என்று பேசுவது மரபு. (84)