5312. | ' "போது ஆயினபோது, உன தண் புனல் ஆடல் பொய்யோ ? சீதா, பவளக்கொடி அன்னவள்-தேடி, என்கண் நீ தா;தருகிற்றிலையேல், நெருப்பு ஆதி !" என்னா, கோதாவரியைச்சினம் கொண்டனன், கொண்டல் ஒப்பான். |
கொண்டல்ஒப்பான் - மேகம் போன்றஇராமபிரான்; கோதாவரியை -கோதாவரியைப் பார்த்து (நதியே); போது ஆயின போது - சூரியன் உதிக்கும் சமயத்தில்; பவளக்கொடி அன்னவள் சீதை - பவளக்கொடி போலும் சீதை; உன தண்புனல் - உன்னுடைய குளிர்ந்த நீரில்; ஆடல் பொய்யோ - நீராடியது பொய்யா; அன்னவள் தேடி - அவளைத் தேடிக் கொண்டு வந்து; என்கண் நீ தா - என்னிடம்கொடுப்பாயாக; தருகிற்றிலையேல் - தாராமல் போவாய் என்றால் (நீ); நெருப்பு ஆதி என்னா - நெருப்பு மயமாகி விடுவாய் என்று கூறி; சினம் கொண்டான் - சீற்றம் கொண்டான். போது - சூரியன்.போதும் வைகிற்றுப் போம் இடம் வேறு இலை என்பர் சேக்கிழார் (இளையான்குடி) போதும் சென்றது குடபால் (வனம்புகு 19) (85) |