5313.

' "குன்றே ! கடிது ஓடினை, கோமளக் கொம்பர்
                                   அன்ன
என் தேவியைக்காட்டுதி;
காட்டலைஎன்னின், இவ்
                                   அம்பு
ஒன்றே அமையும்,உனுடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா,எரியா, கரி ஆக்க" என்றான்.

     குன்றே - மலையே நீ;கடிது ஓடினை - வேகமாக ஓடிப் போய்
(தேடி); கோமளக் கொம்பர் அன்ன - அழகிய பூங்கொம்பு போலும்; என்
தேவியைக் காட்டுதி -
என்னுடைய தேவியைக் காண்பி; காட்டலை
என்னின் -
அவ்வாறு காட்டவில்லை என்றால்; உன் உடைக்குலம் -
உன்னுடைய மலைக் கூட்டங் களையும்; உள்ள எல்லாம் - அம்மலையில்
உள்ள அனைத்தையும்; இன்றே - இன்றைய தினமே; பிளவா - பிளந்து;
எரியா -
எரித்து; கரி ஆக்க - கரியாகச் செய்ய; இவ் அம்பு ஒன்றே -
இந்த ஓர் அம்பு; அமையும் - போதியதாகும். என்றான் - என்று கூறினான்.

     கோமளம் - இளமைஅழகு. கோமளக் கொழுந்து என்றும் (திருவாசகம்)
கோமள ஆன்கன்று (திருவாய்மொழி) என்றும் கூறப் பெற்றன. இஃதொரு ராம
நாடகம்.                                                  (86)