5318.

'தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று
                                    தன்மை;
துணி கொண்டுஇலங்கும் சுடர் வேலவன், தூய
                                    நின்கண்
அணி கண்டுழியே,அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணி கொண்டது;பண்டு அது உண்டு ஆயினும்,
                           பேர்ப்பதுஅன்றால்.

     துணிகொண்டு -பகைவரைத்துணித்தலை மேற்கொண்டு; இலங்கும் -
விளங்கும்; சுடர்வேலவன் - வேலேந்திய இராமபிரான்; தூய - தூய்மையான;
நின்கண் -
உன்னுடைய கண்போலும்; அணி கண்டுழி - ஆபரணத்தைப்
பார்த்த போது; அமுதம் தெளித்தாலும் - அமிர்தத்தையே தெளித்த
போதிலும்; ஆறாப் பிணி - தணியாத நோய்; கொண்டது - பற்றிக்
கொண்டது; அது - அந்தப் பிணி
யானது; பண்டு உண்டு- முன்பே உள்ளது;
ஆயினும் -
எங்கனம் ஆராய்ந்து; பேர்ப்பது அன்று - போக்கத்தக்கது
அன்று; தன்மை - அப்பிணியின் தன்மை; தணிகின்ற நம் சொல் - தாழ்ந்த
நம் சொல்லால்; தொடர் தன்மையது அன்று - பின்பற்றிச் சொல்லும்
தன்மையுடையது அன்று.

    பிரிவாற்றாமையால் இதயத்தில் உள்ள அவலத்தைப் பிணி கொண்டது;
அப்பிணி அமுதத்தைத் தெளித்தாலும் மாறாதது. அது பேர்ப்பது அன்று என்க.
                                                          (91)