5321. | 'பின் கூடியசேனை பெருந் திசை பின்ன ஆக, வி்ல் கூடு நுதல்திரு ! நின்னிடை மேவ ஏவி, தெற்கு ஊடுருவக்கடிது ஏவினன் என்னை' என்ன, முன் கூடினகூறினன், காலம் ஓர் மூன்றும் வல்லான். |
வில்கூடும் -வில்லைஒத்த; நுதல் திரு - நெற்றியை உடைய திருமகளே; பின் கூடிய சேனை - காலம் தாமதித்து வந்த சேனையை; பெருந்திசை பின்ன ஆக - பெரிய திசைகள் பின் ஆகும்படி; நின் இடை மேவ ஏவி - நீ இருக்கும் இடத்தை அடையக் கட்டளையிட்டு விட்டு; தெற்கு ஊடுருவ - தென் திசையைத் துருவிச் செல்ல; என்னை - அடியேனை; கடிது ஏவினன் - வேகமாக ஏவினன்; என்ன - என்று; முன் கூடின - முன்பு நிகழ்ந்தவற்றை; காலம் ஓர் மூன்றும் வல்லான் - முக்காலமும் அறியவல்ல அனுமன்; கூறினன் - சொன்னான். வில் கூடு -இதில் உள்ள கூடு உவம வாசகம். (94) |