5324.

'சுருங்கு இடை ! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடைஉணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல்கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல்கடந்தனென், காலினால்' என்றான்.

     சுருங்கிடை -சுருங்கியஇடையை உடைய தாயே; உன் ஒரு
துணைவன் - 
உன் ஒப்பற்ற நாயகனின்; தூய தாள் - தூய திருவடியில்;
ஒருங்கு அடை -
ஒன்றுபட்டு அடைந்த; உணர்வினோர் - பேரறிவு பெற்ற
ஞானிகள்; ஓய்வு இல் - ஓய்ந்து போதல் இல்லாத; மாயையின் பெருங்கடல்
-
மாயையாகிய பெருங்கடலை; கடந்தனர் - தாண்டி; பெயரும் பெற்றி
போல் -
நீங்கும் தன்மையைப் போல (அடியேன்); காலினால் - கால்களால்;
கருங்கடல் -
கரிய கடலைக்; கடந்தனென் - கடந்து வந்தேன்; என்றான் -
என்று கூறினான்.

     கால் - பிராணசக்தி என்று கூறுவாரும் உளர்.             (97)