5347. | 'பொன் திணி பொலங்கொடி ! என் மென் மயிர் பொருந்தித் துன்றிய புயத்து இனிது இருக்க;துயர் விட்டாய், இன் துயில்விளைக்க;ஓர் இமைப்பின், இறை வைகும் குன்றிடை, உனைக்கொடு குதிப்பென்;இடை கொள்ளேன். |
திணிபொன் -செறிந்தஅழகையுடைய; பொலங்கொடி - தங்கக் கொடிபோலும் அம்மையே (நீ); மென்மயிர் - மென்மையான மயிர்; பொருந்தித்துன்றிய - அமைந்து நெருங்கிய; என் புயத்து - என் புயத்தின் கண்ணே;இனிது இருக்க - அமைதியாக இருக்க (அதனால்); துயர் விட்டாய் -துன்பத்தை விட்டவளாவாய் (அப்போது); இன்துயில் விளைக்க - (உனக்கு) இனிய உறக்கம் உண்டாக; உனைக் கொடு - உன்னைச் சுமந்து கொண்டு; இறைவைகும் - இராமபிரான் தங்கியுள்ள; குன்றிடை ஓர் இமைப்பின் குதிப்பென் - மலையில் ஓர்இமைக்கும் நேரத்தில் குதிப்பேன்; இடை கொள்ளேன் - நடுவில் தாமதம் செய்யேன். பொன் என்பதற்குப் பசப்பு என்றும் கூறலாம் (சிந்தாமணி 1530) இடை கொள்ளேன் என்பதற்குத் தளர்ச்சியடையேன் என்றும் பொருள் கூறலாம். இமைப்பு - கண்ணிமைக்கும் நேரம். இமைப்பின் எய்திட்டு (சிந்தா 1680) இராமபிரான் தங்கிய மலை பிரஸ்ரவனம். (3) |