5397. | 'புளிக்கும் கண்டகர் புண்ணீருள் குளிக்கும் பேய்குடையும்தோறும், ஒளிக்கும் தேவர் உவந்து, உள்ளம் களிக்கும் நல்வினை காணாயோ ? |
புளிக்கும் -(யாவரும்)வெறுப்படைகின்ற; கண்டகர் - முள்போலும் அரக்கர்களின்; புண்ணீருள் - இரத்த வெள்ளத்தில்; குளிக்கும் பேய் - நீராடும் பேய்கள் (அதனுள்); குடையும் தோறும் - முழுகும் போதெல்லாம்; ஒளிக்கும் தேவர் - (இக்காட்சியை) மறைவாயுள்ள தேவர்கள்; உள்ளம் உவந்து - மனம் மகிழ்ந்து; களிக்கும் - செருக்கடைகின்ற; நல்வினை - நற்செயலை; காணாயோ - தோற்றுவிக்கமாட்டாயா. புளிக்கும் -வெறுப்பைத் தரும். ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் (குறுந் - 354) அடை - பதிப்பு. காண்டல் - உண்டாக்குதல். முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். (தொல் - பொருள். 649) அடை - பதிப்பு. குடைதல் - நீரில் மூழ்குதல். 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே'...என்று திருப்பாவை பேசும். குளித்தல் - நீராடுதல். (53) |