5409.

'செப்புறல் என் பல ? தெய்வ வாளிகள்,
இப் புறத்துஅரக்கரை முருக்கி ஏகின,
முப் புறத்து உலகையும் முடிக்க மூட்டலால்,
அப் புறத்துஅரக்கரும் அவியக் காண்டியால்.

     பல செப்புறல் -பலவற்றைக் கூறுவதால்; என் - என்ன பயன்
விளையும்; தெய்வ வாளிகள் - (இராமபிரானின்) கடவுள் தன்மை பெற்ற
அம்புகள்; இப்புறத்து - இந்த உலகில் உள்ள; அரக்கரை முருக்கி -
அரக்கர்களை அழித்து; ஏகின - அப்பாலும் போய்; புறத்து - வெளியில்
உள்ள; முவ்வுலகையும் - மூன்று உலகங்களையும்; முடிக்க - தாக்குவதாலே;
அப்புறத்து அரக்கரும் -
அந்தப் பக்கத்தில் உள்ள அரக்கர்களும்; அவிய -
அழிவதை; காண்டி - பார்ப்பாயாக.

      இராமபிரானின்அம்புகள் இந்த உலக அரக்கர்களைக் கொன்று
அப்பாலும் போய் முட்டுவதால் அப்பக்கத்தில் உள்ள அரக்கர்களும்
அழிவதைப் பார்ப்பாயாக. தெய்வ வாளி - என்பதற்கு விதிபோலும் அம்பு
என்றும் பொருள் கூறலாம். தெய்வ வாளி ஆகையால் தீயவர் உள்ள இடத்தை
அறிந்து அவர்களைத் தண்டித்தன. முட்டல் - தாக்குதல். ஏகின என்னும்
முற்று வினை எச்சப் பொருளில் வந்தது. ஆல் - அசை.             (65)