| 5420. | 'சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம் வேறி; யான் இனிஒன்றும் விளம்பலென்; மேலோய் ! கூறுகின்றன, முன்குறி உற்றன, கோமாற்கு ஏறும்' என்று,இவை சொல்லினள் இன்சொல் இசைப்பாள்; |
இன்சொல்இசைப்பாள் - இனிய சொற்களைப் பேசும் பிராட்டி; (அனுமனை நோக்கி) ஐய ! - தந்தையே; மேலோய் - மேலானவனே !; விரைந்தனை சேறி - விரைந்து செல்வாயாக; தீயவை எல்லாம் - எல்லாவிதமான தீமைகளையும்; வேறி - வெல்வாயாக; யான் - நான், இனி- இப்போது; ஒன்றும் விளம்பலென் - ஒன்றையும் கூற மாட்டேன்; கூறுகின்றன - இப்போது என்னாற் கூறப்படுபவை; முன் உற்றன குறி - முன்பு நிகழ்ந்த அடையாளங்கள் (இ ஃது); கோமாற்கு ஏறும் - இராமபிரான் மனத்திற் பதியும்; என்று - என்று; இவை சொல்லினள் - இவற்றைக் கூறினாள். வெல்தி என்பதுவேறி என்றும் செல்தி என்பது சேறி என்றும் வந்தன. ஏறும் - மனத்தில் பதியும். குறி - அடையாளம். இசைப்பாள் என்பது பிராட்டியைக் குறிக்கிறது. (76) |