சீதை சூடாமணியைத்தருதல்

 5423. 

 

என்றுஉரைத்து, 'இனிது இத்தனை பேர்
                              அடையாளம்;
ஒன்று உணர்த்துவதுஇல்' என எண்ணி
                             உணர்ந்தாள்,
தன் திருத்துகிலில் பொதிவுற்றது, தானே
வென்றது அச்சுடர், மேலொடு கீழ் உற மெய்யால்,

     என்று உரைத்து -என்று கூறி(பிறகு பிராட்டி); இத்தனை பேர்
அடையாளம் -
இவ்வளவு பெரிய அடையாளம்; இனிது - இனிமையானது
(இனி); உணர்த்துவது - கூறக்கூடிய செய்தி; ஒன்று இல் - வேறு ஒன்று
இல்லை; என - என்று; எண்ணி - கருதி; தன் - தன்னுடைய; திருத்துகிலில்
-
அழகிய சேலையில்; பொதிவுற்றது - முடிந்து வைக்கப்பெற்றதும்; மேலொடு
கீழ் -
விண்ணுலகத்திலும் மண்ணுலகத்தி்லும்; உற - நன்றாக; மெய்யால் -
தன்னுடைய மேனியால்; தானே - தான் ஒன்றியாகவே; அச்சுடர் வென்றது -
அந்தச் சூரியனை வென்றதுமாகிய சூடாமணியை; உணர்ந்தாள் - (அனுமன்
பால் வழங்க வேண்டும் என்று) அறிந்தாள்.

     வாயால் கூறவேண்டிய அடையாளம் போதும். இனி கண்ணால் காண
வேண்டிய அடையாளம் வழங்க எண்ணிய பிராட்டி சூடாமணியை அனுமன்
பால் வழங்கக் கருதினாள். அனுமன்பால் சூடாமணி வழங்க வேண்டும் என்று
அறிந்தாள். உணர்தல் - அறிதல்.                              (79)