சீதை சூடாமணியைத்தருதல் 5423. | என்றுஉரைத்து, 'இனிது இத்தனை பேர் அடையாளம்; ஒன்று உணர்த்துவதுஇல்' என எண்ணி உணர்ந்தாள், தன் திருத்துகிலில் பொதிவுற்றது, தானே வென்றது அச்சுடர், மேலொடு கீழ் உற மெய்யால், |
என்று உரைத்து -என்று கூறி(பிறகு பிராட்டி); இத்தனை பேர் அடையாளம் - இவ்வளவு பெரிய அடையாளம்; இனிது - இனிமையானது (இனி); உணர்த்துவது - கூறக்கூடிய செய்தி; ஒன்று இல் - வேறு ஒன்று இல்லை; என - என்று; எண்ணி - கருதி; தன் - தன்னுடைய; திருத்துகிலில் - அழகிய சேலையில்; பொதிவுற்றது - முடிந்து வைக்கப்பெற்றதும்; மேலொடு கீழ் - விண்ணுலகத்திலும் மண்ணுலகத்தி்லும்; உற - நன்றாக; மெய்யால் - தன்னுடைய மேனியால்; தானே - தான் ஒன்றியாகவே; அச்சுடர் வென்றது - அந்தச் சூரியனை வென்றதுமாகிய சூடாமணியை; உணர்ந்தாள் - (அனுமன் பால் வழங்க வேண்டும் என்று) அறிந்தாள். வாயால் கூறவேண்டிய அடையாளம் போதும். இனி கண்ணால் காண வேண்டிய அடையாளம் வழங்க எண்ணிய பிராட்டி சூடாமணியை அனுமன் பால் வழங்கக் கருதினாள். அனுமன்பால் சூடாமணி வழங்க வேண்டும் என்று அறிந்தாள். உணர்தல் - அறிதல். (79) |