| 5427. | 'சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள் ஆடையின்கண்இருந்தது, பேர் அடையாளம்; நாடி வந்து எனதுஇன் உயிர் நல்கினை, நல்லோய் ! கோடி' என்றுகொடுத்தனள், மெய்ப் புகழ் கொண்டாள்.் |
மெய்ப்புகழ்கொண்டாள் - உண்மையான புகழைப்பெற்ற பிராட்டி; (அனுமனை நோக்கி) நாடிவந்து - விருப்பத்துடன் வந்து; எனது இன்உயிர் நல்கினை - என்னுடைய இனிய உயிரை வழங்கினாய்; நல்லோய் - சிறந்தவனே (இஃது); சூடையின்மணி - சூடாமணியாகும்; கண்மணி ஒப்பது - என்னுடைய கண்ணின் மணி போன்றது;தொல் நாள் - நீண்ட நாட்களாக; ஆடையின் கண் இருந்தது - என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது; பேரடையாளம் - பெரிய அடையாளமாகும்; கோடி - (இதனை) கொள்வாயாக; என்று - என்று கூறி (சூடாமணியை; கொடுத்தனள் - (அனுமனிடம்) வழங்கினாள். சூடாமணி என்பதுநடுவே ரத்தினம் பதிந்த வில்லை என்று திரிசிரபுரம் மாகவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை வரைந்தார். சூடா என்னும் வடசொல் சூடை என்று வந்தது. உறுசுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை' என்று பின்பு பேசப் பெறும் (கம்ப. 5473) (83) |