| 5445. | தூவியமலர்த்தொகை சுமந்து, திசைதோறும் பூவி்ன் மணம்நாறுவ, புலால் கமழ்கிலாத, தேவியர்களோடும்உயர் தேவர் இனிது ஆடும் ஆவி எனல் ஆய,திரை ஆர்கலிகள் அம்மா ! |
தூவிய மலர்த்தொகை சுமந்து - சிதறின மலர்களின்கூட்டங்களைத் தாங்கி; திசை தோறும் பூவின் மணம் நாறுவ - எங்கும் மலர்களின் மணமேவீசுவன; (அதனால்); புலால் கமழ்கிலாத - புலால் நாற்றம் வீசாமல் அடங்கியுள்ளனவான; திரை ஆர்கலிகள் - அலைகளை உடைய கடல்கள்; உயர் தேவர் தேவியர்களோடு இனிது ஆடும் - உயர்ந்த தேவர்கள் தம் மனைவிமார்களுடன் மகிழ்வோடு நீராடுகின் ற; ஆவி எனல் ஆய - (தாமரைப் பூக்களோடுகூடிய) பொய்கை என்று சொல்லத் தக்கனவாயின. ஆர்கலிகள்(கடல்கள்) தேவருலகில் உள்ள பூம் பொய்கை போல் விளங்கின. கடல்களில் விழுந்த மலர்த்தொகையின் மிகுதி உணர்த்தப்பெறுகின்றது. ஆவி - பொய்கை. அம்மா; வியப்பு இடைச்சொல். (17) |