5455. | காமரம்களி வண்டு கலங்கிட, மா மரங்கள்மடிந்தன, மண்ணொடு; தாம், அரங்கஅரங்கு தகர்ந்து உக, பூ மரங்கள்எரிந்து பொரிந்தவே. |
காமரம் களிவண்டு கலங்கிட - காமரம் என்னும்பண்ணைப் பாடும் களிப்புள்ள வண்டுகள் கலக்கம் அடைய; மா மரங்கள் மண்ணொடு மடிந்தன - பெரிய மரங்கள் தரையோடு மடிந்து கீழே விழுந்தன; அரங்குதாம் - நாடக சாலைகள்; அரங்க(த்)தகர்ந்து உரி - அழியுமாறு முறிந்து கீழே விழ; பூமரங்கள் எரிந்து பொரிந்த - மலர்களை உடைய பலமரங்கள் எரிந்து பொரிந்து சாம்பலாய்ப் போயின. அரங்கல் -அழிதல்; அரங்கு - மேடை. (27) |