5456. | குழையும்,கொம்பும், கொடியும், குயிற்குலம் விழையும் தண்தளிர்ச் சூழலும், மென் மலர்ப் புழையும், வாசப்பொதும்பும், பொலன் கொள் தேன் மழையும்,வண்டும், மயிலும், மடிந்தவே. |
குழையும்கொம்பும் - வளையும் தன்மையுள்ளசிறு கிளைகளும்; கொடியும் - மலர்க்கொடிகளும்; குயில் குலம் விழையும் தண் தளிர்ச் சூழலும் - குயில்களின் கூட்டம் விரும்பக் கூடிய குளிர்ந்த தளிர்கள் அடர்ந்த இடங்களும்; மென் மலர்ப் புழையும் - மென்மையான மலர்களைக் கொண்ட நுழைவாயிலும்; வாசப் பொதும்பும் - மணமிக்க புதர்களும்; பொலன் கொள்தேன் மழையும் - பொன்னிறம் கொண்ட தேன் மழையும்; வண்டும், மயிலும் மடிந்த - வண்டுகளும், மயில்களும் அழிந்து போயின. மென் மலர்ப்புழையும் - மெல்லிய பூவின் துளையும் என்பது ஒரு பழைய உரை. (28) |